அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை திருப்பத்தில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பாக தார் சாலையை வெட்டி குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டது. இருப்பினும் வெட்டப்பட்ட தார் சாலை மீண்டும் சீரமைக்கப்படாமல் மண் மேடாக உள்ளதால் அவ்வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன் கீழே விழுந்து காயங்கள் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.