திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், வ.கூடலூர் ஊராட்சியை சேர்ந்த வந்தலை கிராமத்தின் எல்லை முடிவில் நான்கு வழிச்சாலை உள்ளது. அதாவது லால்குடி-பாடாலூர் சாலையின் இடையில் கண்ணாக்குடி, விடுதலைபுரம், பெருவளப்பூர் கிராமங்கள் உள்ளது. இதேபோல் காண கிளியநல்லூர் விடுதலைபுரம் கொளக்குடி ரெட்டிமாங்குடி வழியாக சிறுகனூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வரை சாலை உள்ளது. இந்நிலையில் வ.கூடலூர் முதல் வந்தலை தொடர்ந்து லால்குடி-பாடாலூர் தேசியநெடுஞ்சாலை இணைப்பு வரை உள்ள 4 கிலோ மீட்டர் தூரம் தார்சாலை கடந்த 7½ ஆண்டுகளுக்கு முன்பு செப்பனிடப்பட்டது. தற்போது இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.