சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Update: 2022-09-26 14:32 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள தாராபுரம் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அப்பணி விட்டு, விட்டு மெதுவாக நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிலை தடுமாறி குழிக்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்