குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-26 14:00 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து இறவாங்குடி, அய்யப்பன் நாயகன் பேட்டை மற்றும் பாப்பாக்குடி வழியாக காட்டுமன்னார்குடி வரை அரசு டவுன் பஸ் ஒன்று சென்று வருகிறது. இந்தநிலையில் இறவாங்குடியில் இருந்து அய்யப்பன் நாயகன் பேட்டை வரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்