சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-09-23 14:05 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தவிட்டுப்பாளையம் 4-வதுவார்ட்டில் சிமெண்டு சாலை ஒன்று பல இடங்களில் சேதமடைந்தது. இதையடுத்து சிமெண்டு சாலை முழுவதும் உடைக்கப்பட்டு புதிய சாலை போடுவதற்கான பணி தொடங்கப்பட்டது. அந்த பணி பாதிலேயே அப்படியே போட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் முதியவர்கள், பொதுமக்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய சிமெண்டு சாலை போடும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்