திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம், குமராவடி கிராமத்தில் இருந்து கு.வளையபட்டி வழியாக செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் வரை சுற்றி சடையம்பட்டி வழியாக செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.