சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் அவ்வப்போது சிறு சிறு பழுதுகளை சந்தித்து வருகிறது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.