சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-16 14:32 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஆதிச்சனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாச்சியார்பேட்டை கிராமம் கீழத்தெருவிற்கு கிழக்கே உள்ள மயான கொட்டகை செல்வதற்கு பாதை இல்லாமல் குண்டும், குழியுமான பாதையில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும்போது இப்பாதை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்