வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-16 12:26 GMT

அரியலூர் முதல் செந்துறை வரை செல்லும் முதன்மை சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த சாலையில் மாவட்ட விளையாட்டு திடல் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவை அமைந்துள்ளது. இவ்வழியே அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால் மாவட்ட விளையாட்டு திடல் நுழை வாயிலிருந்து குரும்பன் சாவடி ரவுண்டானா வரை சாலையின் இருபுறமும் அதிகளவில் மண்கள் தேங்கியுள்ளதால் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு, இருசக்கர வாகன ஓட்டுகள் வழி விட்டு ஒதுங்கி நிற்கும்போது மண்கள் சறுக்கி விடுவதால் அதிகளவில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. மேலும் காற்று அடிப்பதால் மண்கள் காற்றில் பறந்து அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்