சாலையை அகலப்படுத்த கோரிக்கை

Update: 2022-09-15 14:21 GMT

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலத்தில் இருந்து பட்டகட்டாங்குறிச்சி , செங்குழி வழியாக விக்கிரமங்கலம் வரை செல்லும் 4 கிலோமீட்டர் கொண்ட சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எதிரெதிரே சந்தித்துக் கொள்ளும் பொழுது விலகிச் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. மேலும் இப்பகுதி மக்கள் இந்த சாலையில் வாகனங்களில் செல்லும்போது அதிக விபத்துகளும் ஏற்படுகின்றன . எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகலப்படுத்தி தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்