வேகத்தடை வேண்டும்

Update: 2022-09-14 13:24 GMT

 புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை-விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காலாடிபட்டி சத்திரம் கிராமம். இந்த கிராமம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் பல ஊர்களின் முக்கிய சந்திப்பாகும். இந்த சந்திப்பில் நகர, புறநகர மற்றும் தொலைதூர பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. அதுமட்டுமின்றி எந்நேரமும் கனரக வாகனங்கள், லாரிகள் சென்ற வண்ணம் உள்ளது. இதனால் சாலையை கடக்க பெண்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே காலாடிப்பட்டி சத்திரம் மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்