மதுரை 94 வது வார்டு எம்.எம்.சி.காலனி பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலையானது இன்னும் மூடப்படாமல் உள்ளது. இதனால் இந்தச்சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட அதிகாரிகள் தோண்டிய சாலையை சீரமைத்து பராமரிக்க வேண்டும்.