கிருஷ்ணகிரி ஓசூர் 33-வது வார்டு சி.சி.நகர் (சந்திரசூடேஸ்வரர் நகருக்கு) செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும், சில தனியார் பள்ளிகளும் உள்ளன. இந்த பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் வாகனத்தில் செல்லும் பொழுது மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ், கிருஷ்ணகிரி.