மதுரை மாநகராட்சி தெப்பக்குளம்-ரெயில்வே கிராஸ் உள்ள அனுப்பானடி மெயின்ரோடு சேதமடைந்து மேடு பள்ளங்களாக உள்ளது. மழை பெய்தால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.