கடலூரில் பகல் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக இரவு நேரத்தில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பல்லாங்குழி போல் காணப்படும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.