மதுரை மாவட்டம் சிந்தாமணி 89-வார்டு காமாட்சியம்மன் கோவில் தெருவின் சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் சாலையானது சேறும், சகதியுமாக மாறி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பயன்படுத்த முடிவதில்லை. எனவே இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.