சேறும்,சகதியுமான சாலை
திருப்பூர் போயம்பாளையம் பிரிவில் இருந்து போயம்பாளையம் செல்லும் வழியில் ஒரு வருடத்திற்கும் மேலாக சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையில் பள்ளி வாகனங்கள்,பாதசாரிகள் அதிக அளவில் பயன்படு்த்துவார்கள். சமீபத்தில் மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இந்த சாலையில் வருபவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துைற மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
அப்துல்,திருப்பூர்.
9788185958