சேறும் சகதியுமான சாலை

Update: 2022-07-11 14:24 GMT

சென்னை கொடுங்கையூர் சீதாராம் நகர் 6-வது தெருவில் கடந்த 3 ஆண்டுகளாக மழைநீர் வடிகால்காய் சரிவர செயல்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவு நீர் சாலை முழுவதும் தேங்கி குளம் போல காட்சியளிப்பதுடன், சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருக்கிறது. மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து மழைநீர் தேங்காதவாறு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பார்களா ?

மேலும் செய்திகள்