கடலூர் முதுநகரில் பச்சையாங்குப்பம் சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பச்சையாங்குப்பம் செல்ல தார்சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.