குளமாக மாறிய தார்சாலை

Update: 2022-09-03 13:14 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆதனால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைபெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் இருப்பதால் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக குளம்போல் காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்