சேறும் சகதியுமான சாலை

Update: 2022-09-02 15:33 GMT

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் தொடர் மழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். மேலும் அழுகிய காய்கறிகளை சிலர் சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்