மதுரை மாவட்டம் கூடல்நகர்- அலங்காநல்லூர் சாலை மற்றும் பழங்காநத்தம்- திருப்பரங்குன்றம் பாலம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.