சிதம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து அண்ணாமலை பல்கலைக்கழகம், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால், காந்தி சிலை பகுதிக்கு வந்து, சுற்றித்தான் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதை தவிர்க்க சிதம்பரம் பஸ் நிலையத்துக்கு கிழக்கு பகுதியில் உள்ள வாய்க்காலின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்து கொடுத்தால், காலவிரயத்தை தவிர்த்து எளிதில் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், பள்ளி மாணவிகள் சென்று வர முடியும். எனவே இதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் திட்டத்தை தயார் செய்து, பாலம் கட்டி கொடுக்க முன்வர வேண்டும்.