கிருஷ்ணகிரியில் ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க கடும் சிரமப்படுகிறார்கள். விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன. அரசு மருத்துவக்கல்லூரி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கான ஆய்வு பணிகளும் நடந்து அடுத்த கட்டத்திற்கு செல்லாத நிலையில் உள்ளது. எனவே இந்த பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.