சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-30 13:33 GMT
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட வேலாயுதம் 2-வது தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கொண்டிருக்கிறது. சரிவர சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்