சேதமடைந்த சாலை

Update: 2022-08-29 16:01 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக  காணப்படுகிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகனஓட்டிகள் சேதமடைந்த சாலையில் பயணிக்க முடியாமல் மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்