மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மீன் மொத்த மார்கெட் செல்லும் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் இப்பகுதியில் மின்விளக்கு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் சாலையை சீரமைக்கவும், மின்விளக்கு அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.