சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ெநாறச்சி வளவு வழியாக நங்கவள்ளி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.