குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-09 18:52 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த எச்சம்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதல் விநாயகர் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலையாக போடப்பட்டது. தற்போது அந்த சாலை ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்