கடலூர் முதுநகர் சோனகர் தெரு சாலை முற்றிலும் சேதமடைந்து மேடு, பள்ளமாக காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தற்போது அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் இவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?.