மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சி அக்ரகாரத்தில் சாலை மேம்பாட்டிற்காக தொடங்கிய பணியானது சாலை தோண்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.