செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-20 13:48 GMT

கோபி வாசு லே அவுட் மனை பிரிவில் 4-வதுவார்டில் நகராட்சி பூங்கா ஒன்று உள்ளது. இந்தப் பூங்காவில் முட்செடிகள், கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' நாளிதழ் புகார் பெட்டியில் செய்து பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து பூங்காவில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வெட்டப்பட்டன. ஆனால் அவைகள் முழுமையாக அகற்றப்படவில்லை. பாதி மட்டுமே அகற்றப்பட்டு உள்ளது. எனவே அகற்றப்படாமல் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தமாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்