வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் சாலையில் சி.எம்.சி. மருத்துவமனை அவுட்கேட் பகுதியின் எதிர்புறம் பயணிகள் நிழற்குடை இருந்தது. அந்த நிழற்குடை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து அகற்றப்பட்டது. அதனால் அந்தப் பகுதியில் பாகாயம்-காட்பாடி செல்லும் டவுன் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடித்து அங்கு பழையபடி பயணிகள் நிழற்குடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரிச்சர்ட், தோட்டப்பாளையம்.