வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-ல் செங்குட்டை பகுதியில் 4-வது வார்டில் காரிய மண்டபம் அமைந்துள்ளது. காரிய மண்டபம் மேற்கூரை சிமெண்டு பூச்சிகள் பெயர்ந்து ஆங்காங்கே கீழே கொட்டுகின்றன. அத்துடன் காரிய மண்டபத்தை சுற்றி சமுதாயக்கூடம், ரேஷன் கடை, திருவள்ளுவர் நூலகம், நகராட்சி தூய்மைப் பணியாளர் மேற்பார்வையாளர் அறை என பல உள்ளன. இந்தப் பகுதியில் ஏராளமான குப்பைகள் கிடப்பதால், விஷபூச்சிகள் நடமாட்டம் உள்ளது. மேலும் மாநகராட்சி துப்புரவு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. காரிய மண்டப பகுதியை தூய்மைப்படுத்தி, மண்டபத்தை பழுதுப் பார்த்து பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பா. விஷ்ணு, காட்பாடி.