நிழற்குடை வசதி செய்து தரப்படுமா?

Update: 2024-02-18 17:58 GMT

ஆற்காடு தாலுகா ஆனைமல்லூர் புதிய காலனி பஸ் நிறுத்தத்தில் இருந்து பலர் பஸ் ஏறி பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. பயணிகள் மழை, வெயில் காலங்களில் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அல்லது எம்.பி, எம்.எல்.ஏ.க்களோ தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை கட்டித்தர முன் வருவார்களா?

-கமலக்கண்ணன், ஆனைமல்லூர். 

மேலும் செய்திகள்