போளூரை அடுத்த எடப்பிறை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு, கிராம நிர்வாக அலுவலகம் கட்டி பல ஆண்டுகள் ஆகின்றன. அந்தக் கட்டிடம் தற்போது சேதமாகி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. உறுதி தன்மையற்ற கட்டிடத்தில் பணியாற்ற கிராம நிர்வாக அதிகாரி அச்சப்படுவதால் மாம்பட்டிலிருந்தே பணிபுரிந்து வருகிறார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய கிராம நிர்வாக அலுவக கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
-காசிநாதன், எடப்பிறை.