வந்தவாசி- செய்யாறு சாலையை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக சாலையோரம் இருந்த புளிய மரங்களை அகற்றினர். அதன் வேர் பகுதியை சாலை ஓரத்திலேயே போட்டு விட்டார்கள். அந்த வேர் பொந்துகளில் பாம்பு, வண்டு, விஷ பூச்சிகள் உள்ளன. இரவில் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வெண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காய்ந்த மர வேர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளிதரன், சமூக ஆர்வலர், எச்சூர்.