திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே சர்க்கரை குளம் உள்ளது. இந்தக் குளம் தற்போது பாசிப் படிந்து பச்சை நிறம் போல் காட்சியளிக்கிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பக்தர்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். பராமரிப்பு இன்றி ஆங்காங்கே காலணிகள் வீசப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, திருவண்ணாமலை.