குடியிருப்பு பகுதியில் புகை

Update: 2023-08-13 17:17 GMT

குடியிருப்பு பகுதியில் புகை

திருப்பூர் செரீப் காலனி அருகே புதுத்தோட்டம் 3-வது வீதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் புகை போக்கி வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அடிக்கடி கரும்புகை அதிக அளவில் வெளியேறி வருகிறது. குடியிருப்புக்கு மத்தியில் இந்த புகை போக்கி இருப்பதால் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. தொடர்ச்சியாக இந்த புகையை மக்கள் சுவாசிக்க வேண்டியிருப்பதால் சுவாச கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் வசிக்கும் இடத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் புகை வெளியேற்றப்படுவதை அதிகாரிகள் ஆய்வு ெசய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கவேல், புதுத்தோட்டம், திருப்பூர்.

மேலும் செய்திகள்