பன்றிகள் தொல்லை

Update: 2022-11-13 13:12 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் பன்றிகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்தப் பன்றிகள் வாகனங்கள் செல்லும் நேரத்தில் திடீரென சாலையின் குறுக்கே ஓடும்போது விபத்துகள் நடக்கிறது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் சாலையோரம் கிடக்கும் குப்பைகளை பன்றிகள் கிளறி விடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

-சின்னா, மாதனூர். 

மேலும் செய்திகள்