அரக்கோணம்-காஞ்சீபுரம் மார்க்கத்தில் உள்ள எஸ்.ஆர்.கேட் பகுதியில் பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மழை, வெயிலில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எஸ்.ஆர்.கேட் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-குமார், அரக்கோணம்.