பகுதிநேர ரேஷன் கடை தேவை

Update: 2024-01-21 16:50 GMT

ஆரணி தாலுகா ஆர்.அய்யம்பாளையம் கிராமத்தில் ஒரு ரேஷன் கடை உள்ளது. ஆர்.அய்யம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள காந்தி நகர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அந்த ரேஷன் கடைக்கு 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. அங்கு, ரேஷன் பொருட்கள் வழங்கும்போது மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. காந்திநகர் கிராமத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டி பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அதை, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து, அதில் பகுதிநேர ரேஷன் கடையை அமைக்க மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏ.சுதாகர், அய்யம்பாளையம். 

மேலும் செய்திகள்