வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்

Update: 2022-08-30 12:07 GMT



வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் நகராட்சி அலுவலகம்உள்ளது இந்த அலுவலகத்தில் தனியாருக்கு சொந்தமான வாகனங்கள், ஒப்பந்ததாரர் வாகனங்களும், வெளியூருக்கு செல்லும் போலீசார் மற்றும் பொதுமக்கள், அரசு பணியாளர்கள் இருசக்கர வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன நிறுத்தம் போன்று அதிக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நகராட்சிக்கு தினசரி வரும் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் இத்தகைய வாகனங்களை உள்ளே நிறுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி