தூக்கமின்றி பொதுமக்கள் அவதி

Update: 2026-09-13 10:46 GMT

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் பகுதியில் கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் இரவில் தூக்கமின்றி அவதிக்குள்ளாகின்றனர். கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசுக்களை ஒழிக்க கொசு மருந்தினை முறையாக அடித்து கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்