சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகளை துரத்தி சென்று கடிப்பதுடன், வாகன ஓட்டிகளையும் விடாமல் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்துகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.