பயன்பாட்டுக்கு வராத பயணிகள் நிழல்கூடம்

Update: 2026-09-13 09:12 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் சங்கு ஒலி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழல்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இணைப்புப் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்டாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இணைப்பு பாலம் அமைத்து பயணிகள் நிழல்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்