புதுக்கோட்டை மாவட்டம் நத்தம்பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லுகுடி கிராமத்தில் உள்ள சின்ன மாங்குளம் மடை உள்ளது. இந்த மடை உடைந்து 5 வருடங்களாகியும் சீரமைக்கப்படாததால் பாசன வசதி தடைபட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.எனவே சேதமடைந்துள்ள சின்ன மாங்குளம் மடையை உடனடியாக சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.