பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைகுடிகாடு பஸ் நிறுத்தத்தில் நீண்ட காலமாக பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். பொதுமக்கள் திறந்தவெளியில் நின்று பஸ்சில் ஏறிச் செல்லும் அவல நிலை நிலவுவதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே லெப்பைகுடிகாடு பஸ் நிறுத்தத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.