பூட்டியே கிடக்கும் நூலகம்

Update: 2026-09-13 08:55 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தில் 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டு திறக்கப்படாத நூலகம் இதுவரை பூட்டியே கிடக்கிறது. நூலகத்தின் முன்புறம் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதுடன், அருகில் சிலர் மது அருந்துதல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், முன்புறம் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்