கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாவி குளத்தின் வட மேற்கு பகுதியில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் அதிகளவில் தண்ணீர் உள்ளது. ஆனால் கிணற்றின் மேற்பகுதியில் பாதுகாப்பிற்காக இரும்பு தடுப்புகள் அமைத்து மூடப்படவில்லை. இதனால், அந்த வழியாக கால்நடைகள் கிணற்றில் விழும் நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணற்றின் மீது உலோகத்தில் ஆன ஒரு மூடி அமைக்க வேண்டும்.
- ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.